அறிவகம் புதிய இணையதளம்

Saturday, July 13, 2019

மனிதன் எப்படி வந்தான்? - time travel 7

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என நாம் எதார்த்தமாக சொல்வோம். குரங்கு வகையில் மனிதன் ஒரு உயிரினம் என சார்லஸ் டார்வீனின் பரிணாம கோட்பாடு சொல்கிறது.
காலம், பரிமாணம் குறித்து சென்ற பகுதியில் பார்த்தோம். இங்கு பரிணாமம் குறித்து பார்க்கப் போகிறோம்.

உலகில் முதல் முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம். ஒரு செல் உயிரினம் பல செல் உயிரினமாகி, மனிதன் வரை பரிணாமம் அடைந்திருக்கிறது என்கிறது அறிவியல். பரிணாமம் என்றால் மேம்பாடு என்று பொருள்.

முதன் முதலில் இந்த உலகில் தோன்றிய உயிரினம் புல் பூண்டு என்ற தாவரங்கள், அடுத்து நத்தை, புழு போன்ற ஊர்வன உயிரினங்கள், அடுத்து வண்டு, பூச்சிகள், அடுத்து பறவைகள், அடுத்து விலங்குகள், பின்னர் மனிதன். என சித்தர்கள் உயிரின பரிணாமத்தை விளக்குகிறார்கள். தாவரம், புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதன். இந்த ஆறு அடுக்குகளை ஆறு அறிவாக சித்தரிக்கிறார்கள் சித்தர்கள்.

ஒரு அறிவு உயிரினம் தாவரம், இரண்டு அறிவு உயிரினம் புழுக்கள், மூன்று அறிவு உயிரினம் பூச்சிகள், நான்கு அறிவு உயிரினம் பறவைகள், ஐந்து அறிவு உயிரினம் விலங்குகள், ஆறு அறிவு உயிரினம் மனிதன்.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் இந்த அறிவியல் கோட்பாட்டை வகுத்துள்ளனர். இதில் தொல்காப்பியம் ஒன்று தான் நமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளது. தொல்காப்பியத்தில் மட்டுமே ஆறு அறிவு பரிணாம கோட்பாடு விவரிக்கப்பட்டு உள்ளது. இது தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. உலகின் வேறு எந்த பழமையான இலக்கியங்களிலும் பரிணாம கோட்பாடுகள் இல்லை. எல்லாம் கடவுள் படைத்தார் என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொள்கின்றன. 

அறிவியல் வளர்ந்த இந்த 21ம் நூற்றாண்டில் பரிணாமத்தின் ஆணிவேராய் தொல்காப்பியம் இருப்பதில் தமிழர்களாக நமக்கு கூடுதல் பெருமை.

சரி அறிவியலுக்கு வருவோம்.

பரிணாமம் குறித்து அறிவியல் இன்று வரை ஒரு முழுமையான கோட்பாட்டை தரவில்லை. சார்லஸ் டார்வீன் பரிணாம கோட்பாடுகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளப் படுகிறது. அதுவும் உயிர் தோற்றம் பற்றி எதுவும் குறிப்பதில்லை. உயிர் மேம்பாடு பற்றி மட்டுமே விவரிக்கிறது. அந்த விவரிப்பில் தான் மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்து பிரபலமானது.

கால சூழலை வெல்ல உயிரினங்கள் கடுமையாக போராடுகின்றன. அதற்காக தங்கள் உடலை நீட்சிக்கவோ, குறுக்கிக்கொள்ளவோ முயல்கின்றன. அந்த முயற்சியில் வெல்லும் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்கின்றன என்கிறது அறிவியலின் பரிணாம கோட்பாடு.

இன்று நாம் காணும் தாவரங்கள், விலங்குகள், எல்லாம் பரிணாம போட்டியில் வெற்றி பெற்ற உயிரினங்கள். பரிணாமத்தின் உச்சம் மனிதன் என்கிறது அறிவியல்.

உயிர்வாழ காலசூழலை எதிர்த்து பரிணாமம் அடையும் உயிரினங்களால், ஏன் காலத்தை வெல்ல முடியவில்லை என்பது தான் உச்சகட்ட கேள்வி! உயிர்வாழ உடலை பரிணாமப் படுத்திக்கொள்ளும் உயிரினங்கள் உயிரை நிலைநிறுத்த ஏன் முயற்சிக்கவில்லை? எளிமையாக சொன்னால் மரணத்தை ஏன் வெல்ல முடியவில்லை? 

சூழலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற உயிரினங்களால், காலத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை? பரிணாமத்தின் உச்சம் மனிதனால் முடியாவிட்டால் பரவாயில்லை. காலத்தை வெற்றி கொண்ட வேறு உயிரினங்கள் எதாவது இந்த பிரபஞ்சத்தில் உள்ளனவா?

இந்த கேள்விக்கான விடையை சித்தர்கள் தேடினார்கள். ஆம் மரணத்தை வென்ற கடவுள் இருக்கிறார் என் புரிதலுடன்.

அறிவியல் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறது ஏலியன்ஸ், வேற்று கிரகவாசிகள் என்ற புதிருடன்...

அறிவுப் பயணம் தொடரும்...

முந்தைய கட்டுரைகளை படிக்க : www.arivakam.org

No comments:

Post a Comment