அறிவகம் புதிய இணையதளம்

Wednesday, July 17, 2019

கடவுள் யார்? - Time Travel 9

கடவுள் யார்? இயேசு கிறிஸ்துவா?, அல்லாவா?, சிவபெருமானா?, ராமரா? சூரியனா? அல்லது வேறு யாருமா? இது தான் உலகில் மிகப்பெரிய கேள்வி!


கடவுளே இல்லை என்பதை அறிவியலால் நிரூபிக்க முடியவில்லை. கடவுள் இருக்கிறார் என்பதையும் சித்தர்களால் நிரூபிக்க முடியவில்லை. காலசூழலுக்கு தகுந்தால் போல கடவுள் இருக்கிறார்/இல்லை என்று நாம் கடந்து விடுகிறோம்.

வாழ்நாள் முழுவதும் கடவுள் இருக்கிறார் என்று வாழ்ந்த மனிதனும் இல்லை. கடவுளே இல்லை என்று வாழ்ந்த மனிதனும் இல்லை.

சரி யார் தான் அந்த கடவுள்?

கேள்வியை விட பதில் மிக எளிமையானது. மரணத்தை வென்றவர் கடவுள்! மரணம் என்ற அளவுகோல் தான் கடவுளையும் மனிதனையும் பிரிக்கிறது.

சிவபெருமான் சகாவரம் பெற்றவர் என்றால் அந்த சிவபெருமான் இப்போது எங்கே போனார்? இதே எதார்த்த கேள்வி இயேசுவுக்கும், அல்லாவுக்கும், ராமருக்கும் பொருந்தும். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்தார் என்றால் ஏன் இப்போது அவர் உயிரோடு இல்லை?, பரலோகத்தில் இருக்கிறார். கிரேத யுகத்தில் வருவார் என்ற கற்பனை கதைகள் எல்லாம் அறிவியலுக்கு எடுபடாது.

மரணம் இல்லாத ஒரு மனிதன் இருக்கிறார் என்றால் கண்ணை மூடி நம்பலாம் அவர்தான் கடவுள் என்று. அவர் இயேசுவாக வந்தாலும் சரி, ராமராக வந்தாலும் சரி, வேற்றுகிரக வாசியாக வந்தாலும் சரி.

மரணத்தை வென்றவர் தான் கடவுள். நானோ, நீங்களோ மரணத்தை வென்றாலும் நாம் கடவுள் தான்.

மரணம் என்ற ஒன்று இல்லை எனில் மனிதனுக்கு கடவுள் தேவை இல்லை. உங்களுக்கு மரணமே இல்லை என்றால் நீங்கள் யாருக்கு பயப்பட வேண்டும்? எதையும் சாதிக்க உங்களால் முடியும் போது நீங்கள் தானே கடவுள்!

சரி காலப்பயணம் விடயத்திற்குள் வருவோம்

9 கட்டுரைகளில் காலப்பயணம் குறித்து பேசிவிட்டோம். அடுத்து 10வது இறுதி கட்டுரை. அதில் ஒரு தீர்க்கமான பதிலை நான் தந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் நேரத்தை வீணடித்த குற்றத்திற்கு ஆளாவேன்.

இங்கே உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன்

பத்தாவது கட்டுரையில் நான் எதை நிரூபிக்க வேண்டும்?

1.காலப்பயணத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும்!
2.மரணத்தை வென்று காட்ட வேண்டும்!

இந்த 2ல் ஒன்றை 10வது இறுதி கட்டுரையில் ஆராய்வோம். ஆனால் 2ல் எது என்பதை வாசகர்களாகிய நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டும் வேண்டும் என மழலைவாதம் செய்யக் கூடாது. ஏனென்றால் காலப்பயணமும், மரணம் இல்லாத வாழ்வும் நேர் எதிர்எதிர் ஆனவை.  இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியாது.

1.நீங்கள் காலப் பயணத்தை தேர்வு செய்தால் இறந்த காலத்திற்கு செல்லலாம், எதிர்காலத்திற்கும் செல்லலாம். ஆனால் மரணம் நிச்சயம். 

2.மரணம் இல்லாத வாழ்வை தேர்ந்தெடுத்தால் இறந்தகாலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ செல்ல முடியாது. ஆனால் மரணம் இல்லாத வாழ்வு வாழலாம். 


இரண்டில் எது வேண்டும் உங்களுக்கு?

அதிக வாசகர்கள் தேர்வு செய்யும் விடயத்தை 10வது இறுதி கட்டுரையாக முடிக்கிறேன். 

அறிவுப் பயணம் தொடரும்....

முந்தைய கட்டுரைகளை படிக்கwww.arivakam.org

1 comment:

  1. நம்மால் காலப்பயணம் செய்ய முடியும் என்றால் நாம் தான் கடவுள். நம்மால் மரணத்தை வெல்ல முடியும் என்றால் நாம் தான் கடவுள். மனிதனாக இருந்துகொண்டே மரணத்தையும் வெல்ல முடியாது, காலப் பயணமும் செய்ய முடியாது.

    ReplyDelete