அறிவகம் புதிய இணையதளம்

Wednesday, August 13, 2008

அறிவியலா? ஆன்மீகமா? (உலகின் அவசரத்தேவை - 9)

மனிதகுல பிரட்சனைகள் அனைத்துக்கும் காரணமான அறியாமைகள் எங்கிருந்து வந்தன. எப்படி தோன்றின?

ஆதி மனிதன் தோன்றியது தொட்டு தொடருபவைகள் தான் இந்த அறியாமைகள். தன்னை சுற்றிய பிரபஞ்ச இயக்கங்களையும், வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள மனிதன் தோன்றியது முதலே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். அந்தமுயற்சிகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்.

அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி மனிதமனம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்

மனம் தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது ஆன்மீகம். ஆக இரண்டுமே அறிவின் பயணங்களே தவிர அறிவியல் மட்டுமே அறிவுடமை. ஆன்மீகம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த மூடம் என நாத்திகம் பேசுவது முட்டாள்தனம். பிரபஞ்ச அறியாமைகளை அகற்றிக்கொள்ள மனிதனுக்கு அறிவியல் ஆன்மீகம் என இரண்டுமே தேவைதான்.

(உதாரணம்: சுனாமி தாக்காமல் இருக்க சுவர் எழுப்புவது அறிவியல், சுனாமியில் நீந்த கற்றுக்கொள்வது ஆன்மீகம்.- இது உதாரணம் மட்டுமே ஆன்மீகத்தின் முழுமையான விளக்கம் அல்ல.)

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதா?
பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நாம் வளைவதா?

இந்த கேள்வியை திரும்பத்திரும்ப ஆராய்ந்த ஆதிகால ஆன்மீகஞானிகளும், சித்தர்களும் தெளிவாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதை காட்டிலும், பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு நம்மை வளைத்துக்கொள்வது தான் எக்காலத்துக்கும் சிறந்தது. ஆனாலும் நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பதையும் அவர்கள் ஒதுக்கவில்லை. ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப வலியுருத்தியுள்ளனர்.

ஆன்மீகம் என்பது கட்டுப்பாடுள்ள அறிவியலே அல்லாமல், அறிவியலின் எதிர்வாதமோ அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கையோ அல்ல. உண்மையில் ஆன்மீக ஞானிகள் சொல்லிய சித்தாந்தங்களும் வேதங்களும் தான் அறிவியலின் அடித்தளங்கள். கட்டுப்பாடுள்ள அறிவியல் - இதுதான் வேதாந்த ஆன்மீகத்தின் அடிப்படை கோள்கை.

நமக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்தை வளைக்கும் அறிவியல் ஒரு கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். கட்டுப்பாட்டை மீறுமானால் அது நம்மையே அழித்துவிடும். இப்படி கட்டுப்பாடுகளை சொன்ன ஆன்மீகத்தை ஒதுக்கியது, ஒதுக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இன்று அறியாமைகள், பிரட்சனைகள், வன்முறைகள், அணுஆயுதப் பேரழிவுகள் என நாம் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க காரணமே ஆன்மீக கட்டுப்பாடுகளை தாண்டி விரிந்த அறிவியலால் தான்.

பிரபஞ்சத்தை நமக்கு ஏற்றவாறு வளைப்பதும், அதற்கு ஏற்றவாறு நாம் வளைவதும் கால சூழலை பொருத்தது. இத்தகு சூழலில் சரியானதை தேர்ந்தெடுக்கும் போது அறியாமை அகன்று அறிவுத்தெளிவு பிறக்கிறது. இது ஆன்மீகம் வகுத்த வேதாந்த கோட்பாடு. ஆனால் சோம்பேரிதனமும் பேராசைகளும் நிறைந்த மனிதர்கள் ஆன்மீகவிதிகளை அடியோடு ஒதுக்கினர். அறிவியல், அறிவியில் என்று இயன்றவரை பிரபஞ்சத்தை வளைத்து மனதுக்குள் வசியப்படுத்திக் கொண்டர்னர்.

விஞ்ஞானத்தை மட்டுமே முழுமையாக நம்பியவன் மெய்ஞானத்தை அடியோடு மறந்து விட்டான். விளைவு இன்று பொருள் அறிவியலின் மாயைகளுக்குள் விழுந்து மீண்டுவர முடியாமல் தத்தளிக்கிறான். அறிவியலே கடவுள். அதுவே எல்லாமும். அதன் பார்வை மட்டுமே உண்மை. என்று அறிவியலை முழுமையாக நம்பி, ஆன்மீக கண்களை குருடாக்கிக் கொண்ட நமக்கு விதிக்கப்பட்ட சாபம் தான் இன்றைய அறியாமை அவலங்கள்.

இன்று மனிதன் கடவுளுக்காக கூட அடித்துக்கொள்கிறான். எவ்வளவு பெறிய அவலம்?
கடவுள் யார்? இதுதான் இன்றைய மனிதனின் மிகப்பெறிய அறியாமை.

அறிவியில் மோகத்தில் முற்றிப்போன நாம் விதிப்படி தேடிக்கொண்ட விஷம் தான் இன்றைய அறியாமைகள் என ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம். ஆனால் அறிவியலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது மனங்களுக்கு இந்த விதிவிளக்கம் புரியாது. இதற்குமேலும் இப்படி ஆன்மீக சிந்தனைகளையே நான் பேசினால், இவளும் ஒரு குழப்பவாதி என முடிவு செய்து, இந்த வலைபூவை சுருட்டி மூலையில் வீசிவிட்டு போய் விடுவீர்கள்.

ஆம்! இன்று அறிவியலை குற்றமோ குறையோ சொன்னால் யாருக்கும் பிடிப்பதில்லை. காரணம் மனித மனங்கள் அந்த அளவுக்கு அறிவியலுக்கு அடிமையாகி விட்டன. இன்று மனித மனங்களில் எல்லாம் அறிவியலே குடிகொண்டுள்ளது. எதை சொன்னாலும் அறிவியல் ரீதியில் உபகரண உதாரணங்களோடு சொன்னால் தான் புரியும். அறிவியல் இன்றி ஆன்மீக சிந்தனைகளில் எதையும் சொல்ல முடியாது.

உண்மையில் எண்ணயியலை(ஆன்மீகம்) போதிக்க தான் எண்ணியலை(அறிவியல்) கொண்டுவந்தார்கள் ஆன்மீகஞானிகள். ஆனால் இன்று எண்ணயியலை விட்டுவிட்டு எண்ணியல் தான் எல்லாமும் என குதிக்கின்றோம். உண்மையை விட்டுவிட்டு உதாரணத்தை பிடித்துக்கொண்டோம்.

அர்த்தமுள்ள ஆன்மீகத்தை புரிந்து கொள்ள ஒவ்வொரு மனித மனங்களும் ஏங்கத்தான் செய்கின்றது. ஆனால் அறிவியலின் மாயையுள் புதைந்து விட்ட நமது மனங்களுக்கு எப்படி ஆன்மீகத்தை புரிய வைப்பது?

ஆன்மீகத்தை மனதுக்கு புரியவைக்க நமது மனங்கள் அடிமைபட்டுள்ள அறிவியல் வழியையே கையாளலாம். அப்போது தான் உங்களுக்கும் எனக்கும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். மட்டுமல்ல இரட்டை அர்த்தங்களால் மேலும் மேலும் அறியாமைகள் பெருகாமல் தவிர்க்க முடியும்.

இயேசு கிறிஸ்து, நபிகளார், கிருஷ்ணர் உட்பட இன்னும் பல ஆன்மீக மகான்கள் செய்த தவறு இதுதான். மக்களுக்கு புரியவைப்பதற்காக உதாரணஉவமை நடையில் ஆன்மீகத்தை போதித்தார்கள். பின்னர் அதுவே இரட்டை அர்த்தங்களாக்கப்பட்டு இன்று அறியாமைகளின் உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது மனிதனை. முத்தாய்ப்பாய் சொன்னால் இன்று அறிவியலை விட ஆன்மீகத்தில் தான் அறியாமைகள் புரையோடிக்கிடக்கின்றன.

புரிதலும் சிந்தனைகளும் தெளிவாக இருக்கவேண்டும். மனம்அதை நேரடியாக உணரக் கூடிய எதார்த்த போதனைகளாக இருக்க வேண்டும். அறிவியலால் ஆக்கிரமிக்கப்படடுள்ள நமது மனங்களுக்கு அறிவியல் வழியில் தான் எதையும் நேரடியாக விளக்கிக்கொள்ள முடியும். அது அல்லாமல் வேறு எந்த வழியில் முயன்றாலும் இரட்டை அர்த்தங்களும் அதனால் விளையும் அறியாமைகளும் தான் தொடரும்.

பொருள் அறிவியலால் விளைந்த போகவாழ்க்கையின் மாயத்திரையை கொஞ்சம் விளக்கிப்பார்த்தால் நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை எதார்த்தமாகவே உணரலாம்.

அந்த உன்னத அறிவை சந்திக்க தொடர்வோம்....

தொடர்ச்சி அடுத்த பதிப்பில்... ( பிரபஞ்சத் தோற்ற இயக்க உண்மைகள் என்ன? காலம் எப்படி எல்லோரையும் முட்டாளாக்குகிறது? பூமி சுற்றுவது உண்மையா? கடவுள் யார்? மரணத்துக்கு முன்னும்பின்னும் மனித வாழ்க்கையின் உண்மை தான் என்ன?)

அறிவகம் என்பது வெறும் ஒருசார் கருத்துக்கள் அல்ல. இதில் உலகளாவிய சிந்தனைகளை எதிர்பார்க்கிறோம். மாற்றுகருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இயலாவிட்டாலும் தொடர்ந்து படிக்கிறோம் என்பதையாவது பின்னூட்டம் comments மூலம் தெரியப்படுத்தலாமே...

13 comments:

  1. vaasiththu konduthaan irukkiren

    ReplyDelete
  2. நீங்கள் ஏதோ சொல்ல வருவது போல் உள்ளது. ஆனால் புரியவில்லை. அதனால்தான் படிக்குற பயலுக எல்லாம் ... பின்னங்கால் பிடரியுல அடிக்க ஒடுரானுக...

    அறிவு ஜீவிகளுக்கு எழுவது போல் எழுதுகுறீர்கள். உதாரணங்களுடன் எழுதுங்கள். கதை சொல்லி எழுதுங்கள்

    எளிமையா எழுதுங்கள். உங்கள் எழுத்துகளை புரிந்து கொள்ள பத்து முறை படிக்க வேண்டி உள்ளது.

    ReplyDelete
  3. கட்டுரைகள் மிக நன்றாக இருக்கிறது. ஆன்மிகத்திலும் நல்லது இருக்கிறது என்று எடுத்துச் சொன்னால் அதை மதவாதிகள் மதம் பரப்புவதற்கே பயன்படுத்துவார்கள், ஆன்மிகத்தில் இருக்கும் நன்மைகளை குறித்து சிந்தித்து திருந்தும் மதவாதிகள் எவரும் இல்லை.

    மிக ஆழ்ந்து சிந்தித்து எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள் !

    ReplyDelete
  4. “அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல. அறிவை தேடி மனிதமனம் பயனிக்கும் இருபாதைகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்” - இதை இன்னும் தெளிவாக சொல்லலாம் என்று எண்ணுகிறேன். இங்கு அறிவு என்பது, தன்னையும் தன்னுடைய சுற்றத்தையும் என்பது பொருந்தும். ஏனெனில், ஆதி மனிதனுக்கு, உணவு மற்றும் காமத்தேவைகளைக் கடந்து அவனை தேடத்தூண்டியிருக்கக்கூடியது அவனை சுற்றிய உலகம். மற்றய உயிர்கள், நீர், நிலம் - நேற்று அவன் பார்த்த வெரும் மண்ணில், இன்று புதிதாய் முலைத்த பச்சிளந்தழை, காலை கதிரவன், சுடும் சூரியன், மாலை மதி, நல்லிரவில் வெண்ணிலா, கற்கள் முட்டி அவன் செய்த நெருப்பு, பதிதாய் பெய்த மழை, முதலில் உலுக்கிய குளிர், அவ்வபோது அணைத்த தெண்றல்... இன்னும், அவன் புதிதாய் பார்த்த, உணர்ந்த அத்தனையும்.
    ஆக, இவற்றை புரிந்துகொள்ள முற்பட்ட போது, பயனித்த இரண்டு பாதைகள் அறிவியலும், ஆன்மீகமும். இதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியும் என்று என்னுகிறேன்.
    “மனம் தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியில். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது ஆன்மீகம்.” - இங்கும் சிரிது தெளிவு தேவை. வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது அறிவியல் அல்ல, அறிவியல் என்பது, பிரபஞ்சத்தில் என்ன, ஏன், எப்படி நடக்கிறது என்பதை தேடுவதே ஆகும். ஒரு குழந்தை கையில் கிடைத்த புதிய பொம்மையை உடைத்து, பிரித்து பார்க்கும் உணர்வுதான் அறிவியலின் ஆரம்பம்.
    பிரபஞ்சத்தை வாழ்வுக்காக வளைப்பது ஆசை அத்ர்க்கு முன்கூட்டிய பாதுகாப்புணர்ச்சி. இதில் மனிதன் மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் அடங்கும். விலங்கின் கூடும், மனிதனின் வீடும் இதன் தொடக்கம். இதில், அறிவியல், ஆன்மீகம் இரண்டும் அடங்கும். அறிவியல் தேடலில் கொண்ட அறிவு (தொழிற்நுட்பம்) கொண்டு கட்டப்பட்டது கல்லால் ஆன வீடு. அதில், உரவுகள் திரித்து, வரையரை சமைத்து, வாழ்வியல் நெரிமுறை வகுத்து உயிருட்டுவது ஆன்மீகம்.
    உடல் இயக்கம் - அறிவியல்
    உயிர் - ஆன்மீகம்

    ReplyDelete
  5. அறிவியல் வேறு;ஆன்மீகம் வேறு. ரெட்டை குதிரையில் சவ்வாரி செய்வதுப் போல், அறிவியல் என்பது சுனாமி வந்தால் பாதுகாத்துக்கொள்ள கருவி கண்டுப்பிடித்து எல்லோருக்கும் எச்சரிக்கை விடுப்பது! ஆன்மிகம் என்பது கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி, நாம 'அறியாமை' என்னும் சூழலில் சிக்கி மற்றவர்களையும் மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது. அறிவியல் ஒன்றும் பஞ்ச பூதங்களையும் வளைப்பது அல்ல? கருவி கொண்டு ஆள்வது! இயற்கையோடு வாழ்வது,கடவுள் காப்பாற்றுவார் என்று நீந்தாமல் இருந்து விடாதே மனிதா! உன்னை நம்பு வாழ்க்கை வெளிச்சமாகும். -தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ்

    ReplyDelete
  6. ஆச்சச்சோ ஹிப்ஸ் ஆன்மீகம் என்பதை தவறாக புரிந்து கொண்டீர்கள். கடவுள் காப்பாற்றவார் என நீந்தாமல் இருப்பது மூடநம்பிக்கை. அது அல்ல ஆன்மீகம். பஞ்ச பூதங்களை மனிதன் ஆளுகை செய்வதில்லை. கருவிகளை கொண்டு கையாள்கிறான். அதுவும் ஒரு எல்லை வரை மட்டுமே. ஆனால் கருவியை விட காலமும் இயற்கையும் சக்திவாய்ந்தது. அதை விட மனம் சக்திவாய்ந்தது. அதன் சூத்திரங்களை சொல்வது தான் ஆன்மீகம். அறிவியல் என்பது கணிதம். அதாவது எண்ணியல். ஆன்மீகம் எவ்பது கணிப்பது அதாவது எண்ணங்களின் இயல். நாம் உண்மையை விட்டுவிட்டு உதாரணத்தை பிடித்துக்கொள்கிறோம். அதனால் தான் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கூட மூடத்தனமாகிவிட்டது. கம்பியூட்டர் கருவிதான். ஆனால் அதைவிட பலமடங்கு சக்திவாய்ந்தது நமது மூளை. இதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த மூளையை எப்படி கம்பியூட்டர் போல பயன்படுத்துவது என்ற கலையை நாம் தொலைத்துவிட்டோம். அந்த கலையை கட்டுப்பாடோடு சொல்வதுதான் ஆன்மீகம். இது கூட ஒரு உதாரணத்துக்காக தான் சொல்லியிருக்கிறேன். உண்மை இன்னும் ஆழமானது. அதை எளிமையாக அறிவியல் பூர்வமாக அடுத்த பதிப்பில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள். தங்களை போன்றவர்களின் எதார்த்த கேள்விகள் தான் இந்த கட்டுரை தொடரை இன்னும் எளிமைபடுத்த எங்களுக்கு உதவுகிறது. மிக்க நன்றி

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி. பெயரை குறிப்பிட்டிருந்தால் அடையாளப்படுத்தி பதிலளிக்க எங்களுக்கு எளிமையாக இருக்கும்.
    1. // நீங்கள் ஏதோ சொல்ல வருவது போல் உள்ளது// 2. உதாரணங்களுடன் எழுதுங்கள். கதை சொல்லி எழுதுங்கள் // தங்களின் இந்த ஆலோசணைகளுக்கு அடுத்த பதிப்பில் விரிவாக பதில் சொல்கிறோம். உணர்ச்சி நடையில் எழுதியதால் வாக்கியங்கள் மிக பெரியதாக அமைந்துவிட்டது. மேற்கொண்டு திருத்தி சுருக்கி எளிமையாக எழுதுகிறோம். புறியாத பகுதியை சுட்டிக்காட்டுங்கள். நன்றி.
    *******************************

    //ஆன்மிகத்தில் இருக்கும் நன்மைகளை குறித்து சிந்தித்து திருந்தும் மதவாதிகள் எவரும் இல்லை. மதம் பரப்புவதற்கே பயன்படுத்துவார்கள்.// மிக சரியாக சொன்னீர்கள். எனக்கும் இந்த வருத்தம் இருக்கிறது. ஆனால் ஆன்மீகம் என்பது மதம் மட்டுமல்ல. முழுக்கமுழுக்க நம் மனம் சார்ந்தது. மதவாதிகளின் கருத்து பிடிவாதித்திற்காக ஆன்மீகத்தை விட்டுவிடமுடியுமா? மதத்துக்கும் ஆன்மீகத்துக்குமான வித்தியாசத்தை அடுத்த பதிப்பில் சொல்கிறேன். நன்றி.
    **********************************

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. நளன். இருபாதைகள் குறித்து சரியாக புரிந்த கொண்டீர்கள். அறிவு, அறிவியல், ஆன்மீகம் குறித்து விரிவான விளக்களை அடுத்த பதிப்பில் தொடரலாம். அப்போது நம்முடைய விவாதம் இன்னும் கொஞ்சம் எளிமையாகும்.
    ************************

    ReplyDelete
  8. உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை...

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. //சுனாமி தாக்காமல் இருக்க சுவர் எழுப்புவது அறிவியல், சுனாமியில் நீந்த கற்றுக்கொள்வது ஆன்மீகம்//
    சுனாமியில் நீந்த கற்றுக்கொள்வதும் அறிவியலே.
    நான் ஆன்மீகத்தை நம்பவில்லை. அறிவியலை நம்புகிறேன்.ஆன்மீகத்தை
    நம்பினால் கடவுளே காப்பாற்று என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பேன்

    ReplyDelete
  10. இது ஒரு அற்புதமான பார்வை .நோக்கம் .
    சொல்ல வருவதை பல்ருக்கும் புரிய வேண்டுமே என்ற உங்கள் முயற்சி பல இடங்களில் திசை மாற்றத்தை நோக்கி இலுத்து செல்வது போல ஒரு பிரம்மை தருகிறது .அறிவியல் கட்டுரைகள் எப்போதுமே இப்படி செய்யும் .தொடருங்கள் ..

    ReplyDelete
  11. இது ஒரு அற்புதமான பார்வை .நோக்கம் .
    சொல்ல வருவதை பல்ருக்கும் புரிய வேண்டுமே என்ற உங்கள் முயற்சி பல இடங்களில் திசை மாற்றத்தை நோக்கி இலுத்து செல்வது போல ஒரு பிரம்மை தருகிறது .அறிவியல் கட்டுரைகள் எப்போதுமே இப்படி செய்யும் .தொடருங்கள் ..

    ReplyDelete
  12. அருமை, மிக அருமை.

    நீங்கள் சொல்வதும் சொல்ல வருவதும் அருமையாக இருக்கின்றது. ஆனால் என்னால்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

    தவறு உங்கள் மேலல்ல, என்மேல் தான்.

    நீங்கள் கொடுக்கும் விதை வீரியமாகத்தான் இருக்கிறது, அது விதைக்கப்படுகின்ற என்னுடைய நிலம் தான் விதையை உள்வாங்கி பயிர் விளைவிக்கும் பக்குவத்தில் இல்லை என்பதைப் போல.

    நிலத்தைப் பண்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

    ஆகவே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள தற்போதைக்கு இயலாவிடினும், தொடர்ந்து படிக்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete
  13. இரண்டு வரிகளில் செல்ல வேண்டுமானால் மூடநம்பிக்கை இல்லாத ஆன்மீகமே அறிவியல்.. மனக்கட்டுப்பாடு உள்ள அறிவியலே ஆன்மீகம்..

    ReplyDelete