ஆன்மீகம் சொல்லும் காலத்தின் ரகசியத்தை புரிந்து கொள்ள, முதலில் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆகாயவிரிவு, சூரியன், நட்சத்திரங்கள், பூமி, காற்று, நீர், நிலம், புல், பூண்டு, விலங்கு, மனிதன், செயற்கை, இயற்கை, என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இது எதார்த்தத்திலேயே எல்லோராலும் அறியக் கூடியது தான்.
பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் சுருக்கமாக ‘‘பொருள்-வெளி-இயக்கம்’’ என்கிறது அறிவியல். பிரபஞ்சத்தின் அனைத்தும் இதில் அடங்கி விடுகிறது, என்பதை அனேகமாக எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்த ‘‘பொருள்-வெளி-இயக்கம் என்பவைகள் எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது என்பதில் தான் பல்வேறுபட்ட கருத்துக்கள்.
பிரபஞ்ச தோற்றம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், இன்று பெருவாரியான விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வது ‘பெரும்வெடிப்பு (bigbang) மற்றும் ‘அடிப்படை துகள்பிணைப்பு’ கொள்கைகளைத் தான்.
‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள்திணிவு பந்திலிருந்து(bigbang) வெடித்துசிதறி பறந்து விரிந்தது தான் இந்த பிரபஞ்சப்பொருட்களும் இயக்கங்களும்’’ என சிலவிஞ்ஞானிகளும், ‘‘பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்ச அடிப்படை துகள்களின் ‘பரஸ்பர ஈர்ப்பு - விலக்கு’ விசைகளினால் உறுவானதே இந்த பிரபஞ்சத்தோற்றம்’’ என சில விஞ்ஞானிகளும் விளக்குகின்றனர். மொத்தத்தில் ‘‘பிரபஞ்ச அடிப்படை பொருள் எனும் மூலத்தின் பரிமாற்றங்களும் பரிணாமங்களுமே இப்பிரபஞ்சத்தோற்றம்’’என்பது அறிவியல்துறையின் ஒட்டுமொத்த விளக்கம்.
பிரபஞ்ச அடிப்படைபொருள் எது? அது எப்படிஉருவானது? அதன்இயக்கம் என்ன? இயக்க காரண காரியம் என்ன? இவைகளை கண்டுபிடித்துவிட்டால் பிரபஞ்ச ரகசியங்களையெல்லாம் விளக்கிக்கொள்ளலாம் என்பது அறிவியலாளர்களின் நம்பிக்கை.
பிரபஞ்ச அடிப்படை பொருள் எது? என்பதை கண்டுபிடிக்க பொருளை பிரித்துத் பிரித்து மூலக்கூறு, அணு, அணுத்துகள்கள், குவாண்டங்கள், போட்டான்கள் என பல நுணுக்கங்களை கண்டுபிடித்திக்கிறார்கள்.
அணுத்துகள்களுக்கு கீழ்நிலையான குவாண்டங்களைப் பற்றி புரிந்துகொள்வது கடினம். எளிமையாகச் சொன்னால் குவாண்டகளை ‘ஒளித்துகள்கள்’ எனலாம். ஆனால் அதை முழுமையான விளக்கம் என்றிட முடியாது.
ஒளி என்பது ஒத்த கணத்தில் துகளாகவும், அலையாகவும் இருக்கலாம் என்பது ஒளிதன் அடிப்படை தத்துவம். ஒளியை துகளா அலையா எனநிர்ணயிப்பது கடினம். ஒளியானது துகளாகவும் இருக்கலாம் அலையாகவும் இருக்கலாம் - அது அறியப்படும் அல்லது அளக்கப்படும் கருவிகளைப் பொருத்தது என குவாண்டவியல் இறுதி வரையறை தருகிறது.
பொருளைப் பிரித்தால் அணுக்கள். அணுவைப்பிரித்தால் அணுத்துகள்கள். அணுத்துகளை நுணுக்கினால் குவாண்டங்கள். குவாண்டங்களுக்கீழ் என்ன இருக்கிறது? இதை கருவிகளைக் கொண்டு அறியமுடியாது என்பதை குவாண்டவியல் அறிஞர்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்!
கருவிக்கு கருவி குவாண்டங்களின் தன்மைகள் நிச்சயமற்ற நிலையில் மாறுபடுகின்றன. நிலையை நிச்சயிக்காமல் அதுகுறித்த ஆய்வை அல்லது அறிவை பெறமுடியாது என்பது எதார்த்த உண்மையாக இருக்கிறது.
‘அறியப்படும் அறிவைப்(கருவியை) பொருத்தே ஒளியின் தன்மை’ என்ற தத்துவம் புரிந்துபோன விஞ்ஞானிகளுக்கு ‘ஒளியின் நிச்சயமில்லாத் தன்மைகளைத் தாண்டி அறிவியல் அறிவை செலுத்தமுடியாது’ என்பதுவே இன்றுவரை கிடைத்திருக்கும் தீர்க்கமான பதில். பொருள் அறிவியலால் ஒளிவரை மட்டுமே பயணிக்கமுடியும். அதை தாண்டிய விளக்கங்களுக்கு, பொருள்அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு அவசியம். இதை இன்றைய நவீன விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
பொருள் அறிவியல் என்றால் என்ன? அதற்கு அப்பாற்பட்டஅறிவு என்பது என்ன? அது ஏன் அவசியமாகிறது? இதற்கான விளக்கங்களை புரிந்துகொண்டு தொடர்ந்து பிரபஞ்ச இரகசியங்களை ஆராய்வோம்.
தொடர்ச்சி அடுத்த பதிப்பில்... ( பொருள், வெளி, இயக்கம், காலம் குறித்த விளக்கங்கள்., காலம் எப்படி அறிவியலாளர்களை முட்டாளாக்குகிறது.)
இந்த கட்டுரை தொடரை தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதை பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். உலகின் அவரசத்தேவை, உலக பேரழிவு காரணங்கள், பிரபஞ்ச தோற்றமும் இயக்கமும், மனிதபிறவியும் தொடர் வாழ்க்கையும், மனிதகுல அறிவியல், ஆன்மீகம், அரசியல் பிரட்சனைகள், புதிய யுகத்திற்கான தொலைநோக்கு, என்ற தலைப்புகளில் அடுத்தடுத்த பதிப்புகள் இருக்கும். வலைப்பூ வாசகர்களின் வரவேற்பை பொருத்து தொடர்ந்து வலைபூவிலேயே எழுதலாமா அல்லது பத்திரிக்கைகளிலும் எழுதலாமா, புத்தகமாக வெளியிடலாமா என்ற முடிவு எடுக்க எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.
உங்கள் மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு arivakam@gmail.com
Raviii,
ReplyDeleteVery Good & useful blog to me.
Thanks.. keep it up.
Cheers.
சுவையார்வமாக எடுத்துச் சென்றீருக்கிறீர்கள் !
ReplyDeleteமனிதனின் கவலைகள், பேரானந்தங்கள் இவையெலலம் பிரபஞ்ச இயக்கத்தை பாதிக்குமா ?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ரவி.
ReplyDelete****************************
திரு. கோவி கண்ணன் தங்களின் தொடர் உக்குவிப்புக்கு நன்றிகள்.
//மனிதனின் கவலைகள், பேரானந்தங்கள் இவையெலலம் பிரபஞ்ச இயக்கத்தை பாதிக்குமா ?//
நிச்சயமாக பாதிக்கும். அது எப்படி பாதிக்கும், எந்த அளவுக்கு பாதிக்கும், அதை எப்படி நாம் அறிந்துகொள்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் பிரபஞ்சம், இயக்கம் காலம், அறிவு இவை குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
இன்று அறிவியலால் குறிப்பிடப்படும் அல்லது நாம் எதார்த்தத்தில் காணும் பிரபஞ்சம் அளவீடுகளால் இயங்குவது. இந்த அளவீடுகள் உண்மையானவைகள் அல்ல. உணமையான பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளும் போது தங்களின் கேள்விக்கான பதில் எளிமையாகிவிடும்.
இது குறித்த விரிவான விளக்கங்களை மனிதப்பிறவியும் தொடர் வாழ்க்கையும் பகுதியில் பார்க்கலாம்.
மிகவும் நேர்த்தியாக உள்ளது,.. மேலும் அறிய ஆவலாகயுள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்>>>>>>>
ReplyDelete//தொடர்ந்து எழுதுங்கள்.//
ReplyDeletehifs (tamilish) சிங்கப்பூர்.
// அதை தாண்டிய விளக்கங்களுக்கு, பொருள்அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு அவசியம்- intha arivha yogam //
ReplyDeleteithu tamili than ullathu. ithai thangal virivaga eluthuvathu makilchi alikkirathu. book aga podum vagaiyil thogutthu khorvaiyaga eluthavum.
prabancha urpatti ragaciamum,manithanin padappum, ethil adangiyulla yagatthai ottiya ariviyal villankkangai eluthavum.
enakku oru copy mail pannunga.
எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe)விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்
http://vethathiri-kundalini-kayakalpa.blogspot.com/search?updated-min=2008-04-01T00%3A00%3A00-07%3A00&updated-max=2008-05-01T00%3A00%3A00-07%3A00&max-results=6
http://vethathiri.org/Books/
pirapancha ragaciam kurrithu ungaludaia karrutthukku nerrukkamana philosophys
sivasubramanian. tirupur.tamilnadu
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. சிவசுப்பிரமணியம்.
ReplyDelete// அதை தாண்டிய விளக்கங்களுக்கு, பொருள்அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிவு அவசியம்-intha arivha yogam //
இல்லை. பொருளறிவுக்கு அப்பாற்பட்ட அறிவு என்பது மெய்யறிவு. அதாவது பொருளறிவையும், வெளி அறிவையும் சீர்தூக்கி பார்க்கும் அறிவு. இதில் பொருளறிவு என்பது இப்போது நமக்கு சாத்தியப்பட்டிருப்பது. வெளியறிவு என்பது பொருளறிவுக்கு நேர் எதிரானது(மறுபக்கம்). இது குறித்து விரிவான விளக்கங்களை அடுத்தடுத்த பதிப்பில் தருகிறேன்.
யோகம், தியானம், தவம், சித்து, இதெல்லாம் சித்தர்கள்(ஆன்மீக மகான்கள்) மேம்பட்ட மனித வாழ்க்கைக்காக வகுத்துவைத்த வழிமுறைகள்.
பொருளறிவுக்கு அப்பாற்பட்ட அறிவை தேடி பயணித்த சித்தர்கள் அடைந்த இறுதிநிலை சூன்யம். ஆனால் இந்த சூன்யத்தை விட மனிதவாழ்க்கை மகத்தானது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்நது. அதனால் தான் மனித வாழ்க்கை சிறப்புற யோகம், தியானம், சித்தம் இவற்றை நமக்கு தந்துள்ளார்கள். இதில் பலதை நாம் தொலைத்துவிட்டோம்.
thanks
ReplyDelete//எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe)விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்//
ReplyDeleteI donot agree with this. This is adhwaidha(non-duality-i.e. everything is god). In fact a spiritual analogy of evolution theory, which is scientifically being disproved).
Try the path of duality (Dhwaidha)
which is creator - creation theory. You will get the real answer.
Howvever, I would like to read you further. Keep writing.
AnonymouS
திரு.anony
ReplyDelete//Try the path of duality (Dhwaidha)
which is creator - creation theory. You will get the real answer.//
இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்ன? அதுதனிமுதலா(அத்வைதமா)?, இரட்டையா(துவைதமா)? என்ற கேள்விகளே தவறானவை. காலம் மற்றும் அறிவு குறித்து புரிந்து கொள்ளும்போது இந்த கேள்விகள் அர்த்தமற்றதாகிவிடும்.
இன்று எல்லோருடைய கேள்வியும் இது தான்.
1. கடவுள் யார்?
2. கடவுளை அடைய என்ன வழி?
3. மரணத்துக்கு பின் என்ன சம்பவிக்கிறது?
4. சொர்கம் நரகம் உண்டா?
5. இந்த பூமி. சூரியன் இதெல்லாம் ஒரு நாள் அழியுமா?
6. சிவபெருமான், விஷ்ணு, இயேசு, அல்லா, யாரோ இவர்கள் யார்? இப்போது எங்கு இருக்கிறார்கள்?
7. பலி, பாவங்கள் பின்தொடருமா?
8. நேற்று, இன்று, நாளை என்பது என்ன?
9. அநீதி அக்கிரமங்களை தடுத்துநிருத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது.
10. எனக்கு உதவ என்னை மிஞ்சிய சக்தி எது?
இப்படி சாதாரணமான கேள்விகளுக்கு மிகசரியான பதில் கிடைத்துவிட்டாலே போதும்., பிரபஞ்சம் எப்படி ஆரம்பித்தது. அதன் முடிவு என்ன? என்ற கடினமான கேள்விகள் அர்த்தமற்றதாகிவிடும். அதாவது அது தேவையற்ற கேள்வியாகிவிடும். மேற்சொன்ன எதார்த்த கேள்விகளுக்கு அறிவகத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில் விளக்கம் தருகிறேன்.
தொடர்நது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சொல்லுங்கள். தங்களை போன்றவர்களின் கேள்விகளும் ஊக்குவிப்பும் தான் இந்த கட்டுரை தொடரை முழுமையாக்கும். மிக்க நன்றி.
நல்ல பதிவு..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
மிகவும் அருமை,எளிமை.
ReplyDeleteதொடருங்கள்.
migavum arumai thola
ReplyDeleteSuper sir...
ReplyDeleteஅறிவகம் நல்ல விடயங்களை தருகின்றது. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅட்டாளைச்சேனை மன்சூர்- இலங்கை
arputhamana thagaval aiyya
ReplyDelete